உளி செதுக்குன சிலையாட்டம் ஒருத்தி
நெத்தி வழியும் முடியை திருத்தி
சூரியனை கண்ணுல பொருத்தி
சந்திரன முகத்தில நிறுத்தி
வச்ச கண்ண வாங்காம
பாக்க வச்சா நீங்காம
அணில் கடிச்ச பழமா
வெக்கததில் செவப்பா
அழகான பூவா பக்கம் வந்து சிரிப்பா
சிறு குழந்தை போல துறு துறுனு
இருப்பா
அவ பேசும் பேச்சில் கரும்பாக இனிப்பா
கருமேகம் போல பாச மழை கொடுப்பா
குற்றால சாரலா கூட அவ இருப்பா
பால் சிந்தும் அருவியா எம்மனச பறிப்பா
இப்படியே அவளை வர்ணிக்கும் நானே
எப்படித்தான் காதல் சொல்வேன் புரியவில்லை தானே