Author Topic: RICE (பல வகை சாதம்)  (Read 13946 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #15 on: July 13, 2011, 04:31:31 AM »
                          சீரக சாதம்

அரைக்க :
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வர மிளகாய் - 2
தாளிக்க :
பெரிய வெங்காயம் - ஒன்று
கடுகு - தாளிக்க
பூண்டு - 5 பல்
வேர்கடலை - சிறிது
உளுத்தம் பருப்பு - சிறிது
கடலை பருப்பு - சிறிது
மல்லி தழை - சிறிது
எண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
 

வெங்காயத்தையும், மல்லி தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை கொஞ்சம் பெரியதாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்கடலை போட்டு வறுக்கவும்.

நன்கு சிவந்தததும், வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து தாளிக்கவும். இதற்கிடையில் அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அனைத்தும் நன்றாக வதங்கிய பின் அரைத்த பொடியையும் சிறிது மல்லி தழையையும் சேர்த்து தாளித்து, தேவையான உப்பை சேர்க்கவும்.

நன்கு அனைத்தும் கலவையாகும்படி மிதமான சூட்டில் வதக்கவும். இல்லை எனில் சில சமயம் கருகிய வாசம் வந்துவிடும்.

சூடான சாதத்தை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும். மீதமுள்ள மல்லி தழையை தூவவும்.

சூடான சத்தான சீரக சாதம் ரெடி
 
கறிவேப்பிலையையும் சேர்க்கலாம். நல்லெண்ணெய் கொண்டு செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். உடலுக்கு குளிர்ச்சியான பத்திய வகை சாதம் இது.

« Last Edit: July 13, 2011, 05:49:51 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #16 on: July 13, 2011, 04:32:50 AM »
                                 மட்டன் கோஃப்தா பிரியாணி

கோஃப்தாவிற்கு:
எலும்பில்லா திக்கான மட்டன் - 4 துண்டுகள்
வெங்காயம் - சிறியதாக ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரித்தெடுக்க
மல்லிதழை - சிறிதளவு
பிரியாணிக்கு:
அரிசி - ஒன்றரை டம்ளர்
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - மூன்று தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதியளவு
மல்லி, புதினா தழை - சிறிதளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 50 மிலி
பட்டை - சிறிய விரல் அளவு இரண்டு
ஏலக்காய் - மூன்று
கிராம்பு - இரண்டு
பிரிஞ்சி இலை - பாதியளவு
 

மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிரியாணி மசாலா தயார் செய்ய ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்னெய் ஊற்றி சூடு வந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.

பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின் தக்காளி, பச்சைமிளகாயை சேர்த்து மசிய வதக்கவும்.

அவை வதங்குவதற்குள் கோஃப்தாவிற்கு தயார் செய்ய மட்டனை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொண்டு வெங்காயத்தையும் மல்லியையும் மிகவும் பொடியாக நறுக்கி சேர்த்து அதனுடன் இதர பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை சிறு சிறு உருண்டைகளாக்கவும்.

தக்காளி வதங்கியவுடன் கரம் மசாலாவை தவிர்த்து மற்ற தூள்களை சேர்த்து நன்கு வதக்கி விட்டு தயிரும் மல்லி புதினாவில் முக்கால் பகுதியும் நறுக்கி சேர்த்து அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயிலேயே மூடியை போட்டு பச்சை வாசனை போக வதங்க விடவும்.

அதற்குள் மற்றொரு சிறிய வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும் மிதமான தீயிலேயே கோஃப்தா உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு நன்கு எண்ணெய் விட்டு பச்சை வாசனை இல்லாமல் மசாலா மணக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறை பிழிந்து கிளறி விட்டு பொரித்த உருண்டைகளையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி வைக்கவும்.

அதன் பின் அரிசியை கழுவி வைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் அரிசி வேக வைப்பதற்கான அளவு தண்ணீர் விட்டு அதற்கு தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதி வந்ததும், அரிசியை தண்ணீர் இல்லாமல் போட்டு முக்கால் பாகம் வேக வைத்து வடிக்கட்டி வைக்கவும்.

அடுத்து பாத்திரத்தில் வடிக்கட்டிய சாதத்தையும், மசாலாவையும் லேசாக கலந்து விட்டு மீதமுள்ள மல்லி புதினா தழையை பொடியாக அரிந்து தூவி கரம் மசாலாவையும் தூவி நெய்யும் சேர்த்து விரும்பினால் கலர் பவுடர் சிறு துளி ஒரு பக்கமாக போடவும்.

மூடியில் அலுமினிய ஃபாயில் போட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் தம் போடும் ப்ளேட் வைத்து சூடு வந்ததும் இந்த பாத்திரத்தை வைத்து மூடியின் மேல் கனமான பொருளை வைத்து அடுப்பை குறைந்த தீயில் விட்டு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தம் போடவும். பிறகு மூடியைதிறந்து ஒரு முறை கிளறி விட்டு மூடி மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான மட்டன் கோஃப்தா பிரியாணி ரெடி. வெங்காயம், தயிர் ரைத்தாவோடு பரிமாறலாம்.
 
கோஃப்தாவிற்கு வெங்காயம் பொடியாக நறுக்க முடியவில்லை என்றால் அரைத்தும் சேர்க்கலாம். ஆனால் தண்ணீர் சேராமல் பார்த்து கொள்ளவும். மட்டன் துண்டாக இல்லாமல் கைமாவிலும் இதேபோல் அரைத்து செய்யலாம்.
« Last Edit: July 13, 2011, 05:50:10 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #17 on: July 13, 2011, 04:33:45 AM »
                               தக்காளி சாதம்

தக்காளி - அரை கிலோ
வெங்காயம் - கால் கிலோ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
அரிசி - 2 டம்ளர்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
தாளிக்க:
வரமிளகாய் - 8
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கடலைபருப்பு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
 
தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரிசியை கழுவி உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துக் கொள்ளவும்

பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக சுருங்கும் வரை வதக்கவும்.

பின்னர் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.

எண்ணெய் பிரிந்து வரும் போது தக்காளியை சேர்த்து சுருளும் வரை வதக்கவும்.

பின்னர் சாதத்தை கொட்டி நன்கு ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.

சுவையான தக்காளி சாதம் ரெடி
« Last Edit: July 13, 2011, 05:50:27 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #18 on: July 13, 2011, 04:34:44 AM »
                              மீன் பிரியாணி

பெரிய மீன் - இரண்டு கிலோ
பாசுமதி அரிசி - ஏழு கப்
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்சைமிளகாய்- மூன்று
மல்லி கட்டு - ஒன்று
புதினா கட்டு - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - நான்கு மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - இரண்டு தேக்கரண்டி
மல்லி பொடி - மூன்று மேசைக்கரண்டி
மீன் பிரியாணி மசாலா - மூன்று மேசைக்கரண்டி
கலர் பவுடர் - சிறிது
மீனில் தடவும் மசாலா செய்ய:
மல்லி பொடி - மூன்று மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - இரண்டு மேசைக்கரண்டி
சோம்பு - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா மூன்

வெங்காயத்தை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். தேவையான இஞ்சி பூண்டையும் எடுத்துக் கொள்ளவும். மீனில் தடவ வேண்டிய மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

மல்லி தழையை பொடியாக நறுக்கவும், புதினாவையும் அதைப் போல் நறுக்கவும் பச்சைமிளகாயை கீறி வைக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

பின்னர் மீனை சுத்தம் செய்து அரைத்த மசாலாவை அதன் மேல் தடவி அரை மணி நேரம் ஊற விடவும்.

மீன் ஊறியவுடன் ஃப்ரை பேனில் எண்ணெய் ஊற்றி மீனை போடவும். மீன் சிறிது வெந்தவுடன் திருப்பி விடவும். மீனை முறுகலாக வறுக்க கூடாது. சிறிது நேரம் சிவக்கும் வரை வறுத்தால் போதும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து சிறிதளவு வெங்காயத்தை எடுத்து வைத்து கொண்டு மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு முறுகலாக வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் மல்லி, புதினா போட்டு கிளறி விட்டு மல்லி தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா போட்டு உப்பு சிறிது போட்டு கிளறவும்.

வறுத்த மீன் துண்டுகளை அதன் மேல் சிறிது நேரம் வைத்து பின் மீனை எடுத்து விடவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் அரிசியை கொட்டி நீரில் இருபது நிமிடம் ஊற விடவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்திருந்த சிறிது வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வதங்கியதும் அதில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை போட்டு உப்பு போட்டு முக்கால் பதத்துக்கு வேக வைக்கவும்.

வெந்ததும் வதங்கிய கிரேவி மேல் சாதத்தை கொட்டவும். அதன் மேல் கலர் பொடியை சிறிது நீரில் கரைத்து சுற்றிலும் ஊற்றவும். பின் சாதத்தை கிளறி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அதன் மேல் சாதத்தை போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து பதினைந்து நிமிடம் தம்மில் போடவும்.

சூடான மீன் பிரியாணி தயாராகி விட்டது. இதற்கு கொஞ்சம் வேலை அதிகம் தான் ஆனால் டேஸ்ட்டும் அதிகம்.
 
« Last Edit: July 13, 2011, 05:50:42 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #19 on: July 13, 2011, 04:35:45 AM »
                                     பட்டாணி பாத்

1/2 கப் ரவை,
1/2 கப் சேமியா,
3 பச்சை மிளகாய்,
1 மேஜைக் கரண்டி முந்திரி பருப்பு,
1/2 தேக்கரண்டி உளுந்துப் பருப்பு,
1/2 தேக்கரண்டி கடுகு,
1/4தேக்கரண்டி மஞ்சள் தூள்,
5 மேஜைக் கரண்டி பச்சைப் பட்டாணி,
1 மேஜைக் கரண்டி நெய்,
ஒரு எலுமிச்சம் பழம்,
சிறு துண்டு இஞ்சி,
தேவையான அளவு உப்பு,
கறிவேப்பிலை
 


ரவை, சேமியாவை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பு, உளுந்துப் பருப்பு, கடுகு ஆகியவற்றை வாணலியில் நெய்யை ஊற்றித் தாளித்து, பட்டாணி, இஞ்சி, மிளகாயுடன் வதக்கிக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு நீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் ரவை, சேமியா இரண்டையும் போட்டுக் கிளறி, நெய் ஊற்றி, கறிவேப்பிலை, எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும்.
இதனுடன் கடையில் விற்கும் ரொட்டிகளை வாங்கி துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதை ரவை, சேமியா இருக்கும் வாணலியில் போட்டுக் கிளறவும்.
ரொட்டித் துண்டுகள் சேர்ப்பது உங்கள் விருப்பமே.
« Last Edit: July 13, 2011, 05:50:56 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #20 on: July 13, 2011, 04:36:56 AM »
                                           புதினா புலாவ்

பாசுமதி அரிசி – 200 கிராம்
1.   வறுத்து பொடிக்க
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – ஒரு சின்ன துண்டு
பிரியாணி இலை – இரண்டு
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
2.   வதக்கி அரைக்க
பட்டர் (அ) நெய் – ஒரு ஸ்பூன்
புதினா – 1 கட்டு
வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
3.   தாளிக்க
எண்ணை + பட்டர் – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் – பொடியாக அரிந்த்து ஒரு மேசை கரண்டி
 

1.   அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
2.வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து பொடிக்கவும்.
3.   வதக்கி அரைக்க வேண்டியவைகளை வதக்கி அதனுடன் பொடித்த பொடியையும் கலக்கவும்.
4.   குக்கரில் எண்ணை + பட்டர் சேர்த்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
5.   அரைத்த கலவையை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அரிசி சேர்த்து, அரிசி ஒரு பங்குக்கு ஒன்னறை அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
சுவையான மனமான மின்ட் புலாவ் ரெடி
Note:
புதினா என்றாலே புத்துணர்வு தான்.பிரியாணி , கிரேவி வகைகளுக்கு மணம் தருவதும் புதினா. புதினா துவையல், புதினா டீ புதினா வடை என பல வகையாக தயாரிக்கலாம். அது போல் புதினா புலாவ், இந்த முறை நான் முயற்சி செய்தது, வாசனையாக பக்க உணவு கூட எதுவும் இல்லாமல் அப்படியே பிடிச்சி சாப்பிடலாம்.இதில் தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் சேர்த்து கொண்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்

« Last Edit: July 13, 2011, 05:51:10 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #21 on: July 14, 2011, 03:42:56 AM »
                     தேங்காய் பால் சாதம்

பாசுமதி அரிசி - ஒரு கப்
தேங்காய் பால் - 1 1/2 கப்
தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசியை முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் சட்டியை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளிக்கவும்.

பின் ஊற வைத்த அரிசியை போட்டு கிண்டவும்.

அடுத்து தேங்காய்பாலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட்டு மிதமான தீயில் வேக விடவும். சாதத்தில் உள்ள பால் வற்றி மேல் சாதம் தெரியும்போது தீயை சிறிதாக்கி பேப்பரை போட்டு மூடி பதினைந்து நிமிடம் தம்மில் விடவும்.

கமகமக்கும் தேங்காய் பால் சாதம் ரெடி

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #22 on: July 14, 2011, 03:44:18 AM »
                                           பைனாப்பிள் சாதம்

பாசுமதி அரிசி 200 கிராம்
பைனாப்பிள் கூழ் ஒரு கப்
உப்பு தேவையான அளவு
பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய காரட் ஒரு கைப்பிடி
தாளிக்க
கடுகு
உளுத்தம் பருப்பு சிறிதளவு
கடலை பருப்பு சிறிதளவு
பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
மஞ்சள் பொடி அரை டீ ஸ்பூன்
கொத்தமல்லி -- பொடியாக நறுக்கியது ஒரு டீ ஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
எண்ணெய் 4 டீ ஸ்பூன்
 


முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு மீதியுள்ள பொருட்களையும் சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும். பிறகு, பச்சை பட்டாணி, மற்றும் காரட்டைப் போட்டு சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும். ( பெரியவர்களுக்குக் காரம் தேவை பட்டால், சிறிது காஷ்மீர் மிளகாய் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும்)
கடைசியில் பைனாப்பிள் கூழையும் அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
உதிர் உதிராக வடிக்கப் பட்டுள்ள பாசுமதி சாதத்தில் இக்கலவையை சிறிது சிறிதாக போட்டு கலந்து மேலே கோத்த மல்ளியைத் தூவவும். சூடாக பரிமாறவும். பச்சை, ஆரஞ்சு என்று கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகள்
இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். (குழந்தைகளுக்கு சமைக்கும் போது பச்சை மிளகாயை கீறி போடவும். அகற்றுவதற்கு எளிது)

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #23 on: July 14, 2011, 03:45:58 AM »
                                    குடைமிளகாய் சாதம்

குடைமிளகாய் - 3 சிறியது (சிகப்பு, மஞ்சள், பச்சை)
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
தனியா - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சாதம் - 2 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி [விரும்பினால்

எண்ணெய் இல்லாமல் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தனியா, வேர்க்கடலை மற்றும் மிளகை வறுத்து எடுக்கவும். குடைமிளகாயை நறுக்கி வைக்கவும்.

வறுத்த பொருட்களை கொரகொரப்பாக பொடித்து கரம் மசாலா சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். 3 நிமிடம் வதக்கி உப்பு மற்றும் மசாலா பொடியை சேர்த்து வதக்கவும்.

குடைமிளகாய் முக்கால் பாகம் வெந்ததும் இறக்கி சாதத்துடன் கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.

விரும்பினால் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து எடுக்கலாம். வடை, ரைத்தா போன்றவையுடன் சூடாக பரிமாறலாம்.



புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #24 on: July 14, 2011, 03:47:31 AM »
                                     கோவை அரிசிபருப்பு சாதம்

பொன்னி அரிசி - 2 கப்
துவரம்பருப்பு - 3/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
குருமிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமல்லிவிதை - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3 எண்ணம்
பூண்டு - 5 பல்
தேங்காய் - 1 கீற்று
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 5 கப்
 


அரிசியை,பருப்பு நன்கு கலைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும்.
பூண்டு தோல் உரித்து வைக்கவும்.
தேங்காய் பொடியாக அரிந்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, குருமிளகு, சீரகம், வரமல்லிவிதை, வரமிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இதனுடன் பூண்டு, வெங்காயம்,தேங்காய், தக்காளி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து களைந்த அரிசி பருப்பு சேர்த்து 3 விசில் விடவும்.
கொத்துமல்லி இழை தூவி கிளறவும்.
சுவையான கோவை அரிசிபருப்பு சாதம் தயார்.
Note:
பொரித்த அப்பளத்துடன் சூடான சாதத்தின் மேல் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட சுவையை அள்ளும். ( சாதம் வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றினாலே போதும் பருப்புக்கு என்று தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை )


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #25 on: July 14, 2011, 03:49:44 AM »
                                      சன்னா ரைஸ்

சன்னா- 1 கப் (வேக வைத்தது)
பாஸ்மதி அரிசி- 2 டம்ளர்
வெங்காயம்- 3
தக்காளி-2
தயிர்- 1/2 கப்
பிரியாணி மசாலா (அ) புலாவ் மசாலா பொடி- 2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது-2 ஸ்பூன்
கொத்தமல்லி,புதினா- 1 கைப்பிடி
முந்திரி-10
நெய்- 2 மேசை கரண்டி
பச்சை மிளகாய்- 2
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
எலுமிச்சை -2
 


சன்னாவை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்துக்கொள்ளவும்.
தக்காளியை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
பாத்திரத்தில் நெய் சேர்த்து மிளகாய்,முந்திரி வறுக்கவும்.
பின் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதில் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
பின் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அதில் தயிர்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சன்னா சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் (4 டம்ளர்),உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்த பின் அரிசியை கொட்டி வேக விடவும்.
தண்ணீர் வற்றும் சமயத்தில் சிறுதீயில் வைத்து 15 நிமிடம் தம்மில் போடவும்.
பின் கீழிறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து மீண்டும் கிளறி மூடிவிட்டு 15 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.
Note:
சன்னா ஊற வைக்கும் சமயத்தில் 8 முறையாவது தண்ணீரை மாற்றவும். அதனால் வாயு பிரச்சனை நீங்கும். எலுமிச்சை சாறு பிழியும் போது அதிகமாக கசக்கி பிழியாமல் லேசாக பிழிந்து வரும் சாறு மட்டும் உபயோகிக்கவும். இதனால் கசப்பு சுவை வராது. வீணாக்க விருப்பமில்லை எனில் மீதி இருக்கும் சாற்றில் ஜூஸ் தயார் செய்யலாம். அல்லது ரைத்தா செய்யும் போது பிழிந்துவிடலாம். தயிர் சேர்ப்பதால் ரைத்தாவில் கசப்பு தெரியாது. விதைகள கண்டிப்பாக சேர்க்க வேண்டாம். இதற்கு ரைத்தா, தாளிச்சா நல்ல காம்பினேஷன்.


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #26 on: July 14, 2011, 03:51:00 AM »
                              கோபி புலாவ்

பாஸ்மதி அரிசி - ஒரு கப்
காலிப்ளவர் - 1 (பெரிதாக உதிர்த்து சுத்தபடுத்தி வைக்கவும்)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு - 5 பல்
நெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
 

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை ஆய்ந்து நறுக்கி வைக்கவும்.

குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.

அவை பொரிந்து வரும் போது வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, புதினா சேர்த்து வதக்கவும். பின்பு காலிப்ளவர் சேர்த்து லேசாக வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்கும் போது உப்பு மற்றும் அரிசி சேர்க்கவும்.

கொதி நன்கு வரும் போது, கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

ஆவி அடங்கியதும் திறந்து பார்த்தால் புலாவ் தயாராகி விடும். தயிர் பச்சடி, டல்மா, கிராவியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
 

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #27 on: July 14, 2011, 03:53:11 AM »
                                      திண்டுக்கல் பிரியாணி

பாஸ்மதி அரிசி - 4 டம்ளர் (1 கிலோ)
கோழி - 1 கிலோ
தேங்காய் பால் - 2 டம்ளர்
தண்ணீர் - 5 டம்ளர்
நாட்டு தக்காளி - 4 (நான்கு நான்காக நறுக்கவும்)
வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் விழுது - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 6
நெய் - 100 மில்லி
எண்ணெய் - 100 மில்லி(விரும்பினால்)
தயிர் - அரை கப்
எலுமிச்சை - 3
தரமான மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு (வாசனை தூள்) - 1 தேக்கரண்டி
முந்திரி - 10
உப்பு - தேவைக்கு
வாசனை பொருட்கள்:
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரிஞ்சி - 2
அன்னாசி பூ - 2
 


சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லியை ஆய்ந்து அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிரியாணி செய்யப்போகும் பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி முந்திரி, வாசனைப்பொருட்கள் சேர்த்து கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகாய் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

மல்லி, புதினா சுருள வதங்கிய பின்பு, இஞ்சி பூண்டு விழுது, வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் வாசனை தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அத்துடன் தயிர் சேர்த்து கிளறவும்.

பின்பு நன்கு சுத்தம் செய்து நறுக்கிய கோழி துண்டுகள் சேர்த்து அத்துடன் உப்பு சேர்க்கவும். மசாலா கோழித் துண்டுகளில் ஒட்டும் படி பிரட்டி விடவும். பின்னர் மூடி விடவும்.

தேங்காய்ப்பாலை விடவும். கோழித்துண்டுகள் அரைவேக்காடாக வெந்ததும், தண்ணீர் சேர்க்கவும், உப்பு சரி பார்த்து கொள்ளவும்.

கொதி வரவும் கழுவிய அரிசியை சேர்க்கவும். தண்ணீர் வற்றி சோறு வெந்து வரும். கால் வாசி தண்ணீர் இருக்கும் பொழுது எலுமிச்சைபழம் பிழிந்து விடவும். திரும்ப மெதுவாக ஒரு சேர பிரட்டி விடவும்.

தம் போட பிரியாணி பாத்திரத்தின் அடியில் தோசைக்கல்லை வைத்து சூடேறியதும் அடுப்பை சிம்மில் வைக்கவும். பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி திரும்ப மூடி போட்டு மூடவும். அல்லது ஆவி போகாமல் தம் ஆக மேலே கனமான பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம்.15-20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.

உடனே திறக்காமல், மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறந்து, பிரட்டி விட்டு பரிமாறவும்.

சூடான சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி ரெடி.

 

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #28 on: July 14, 2011, 03:55:11 AM »
                                        பட்டாணி கோஸ் சாதம்

முட்டை கோஸ் - ஒரு கப்
பச்சை பட்டாணி - அரை கப்
சின்ன வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை - சிறிது
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
மிளகாய் தூள், மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிது
சாதம் - ஒரு கப்
 

முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும் துண்டுகளாக நறுக்கவும்.

பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு பருப்புகள், நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதில் கோஸ் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

தண்ணீர் நன்கு சுண்டியதும், சாதத்தை சேர்க்கவும்.

மசாலா மற்றும் காய்களுடன் சேரும்படி உடையாமல் கிண்டி எடுக்கவும்.

கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். சுவையான பட்டாணி கோஸ் சாதம் ரெடி

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #29 on: July 14, 2011, 03:56:30 AM »
                                    மேதி ரைஸ்

பாசுமதி அரிசி - ஒரு ஆழாக்கு (200 கி)
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பட்டை, லவங்கம் - தாளிக்க
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சம் பழம் - அரை மூடி
 
வெந்தயக் கீரையை அலசி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்னர் வெந்தயக் கீரை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வதக்கவும்.

இப்போது ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து ஒரு கிளறு கிளறி, அதனுடன் ரசப் பொடியை சேர்க்கவும்.

பின்னர் 1 1/4 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். ஒரு விசில் வந்ததும் 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து குக்கரை நிறுத்தவும். சமைக்கும் நேரம் குக்கரைப் பொறுத்து மாறுபடும்.

ஆவி அடங்கியதும் அரை மூடி எலுமிச்சம் பழம் சேர்த்து கிளறி பரிமாறவும். மேதி ரைஸ் தயார். இதனுடன் குருமா, ரைத்தா, பனீர் பட்டர் மசாலா நன்றாக இருக்கும்.

 

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்