நான் நேசிக்கும்
அழகிய மலரே...
முட்கள் நிறைந்த
மலரே...
என் கண்கள் ஏனோ
உன்னை மட்டும்
ரசிக்க துடிக்கிறது...
என் கைகள் ஏனோ
உன்னை மட்டும்
தொட நினைக்கிறது...
என் இதயம் ஏனோ
உன்னை மட்டும்
தினமும்
என் தலையில்
ஏந்திச் செல்ல
ஏங்குகிறது...
எனக்கு பிடித்தமான
என் ஆசை
ரோஜா மலரே...
எனக்காகவே
பூத்துக் குலுங்கும்
சிவப்பு நிற அழகியே...
காதலர் தினம்
வந்தாலே...
எல்லோருக்கும்
கொண்டாட்டமே
உலகமே
உன்னை தேடி
அலைகிறது...
காதலன்
காதலிக்கும்,
காதலி
காதலனுக்கும்,
மாறி...மாறி...
உன்னை பரிமாறி...
கட்டியனைத்துக்
கொள்கிறார்கள்
உன் அழகை...
ஒரு நாளில்
மட்டுமே
ரசித்து...
உன்னை
தூக்கி வீசி
செல்லும் மத்தியில்...
உந்தன் அழகிய
தோற்றத்தை
தொடர்கதையாக...
விடாமல்
தொடர்ந்து ரசிக்கும்
உன்னைக் காதலிக்கிறேன்
எனக்காக...
எப்போதுமே
வாடாமல்
இருப்பாயா...?
என்னைக் காதல்
செய்ய வைத்த
காதல் ரோஜாவே ...
J❤️S❤️B