எம் மாவீரர்களுக்கு சமர்ப்பணம்
உறக்கம் இழந்த கண்கள்
மீளுறக்கம் கொள்ளும் நேரம்...
விதி வரைந்த துரோகத்தில்
சதி செய்த தமிழனால்
தமிழனே தமிழனைக்கொல்ல
இறக்கமுடியாதத் துயரங்களை
நெஞ்சில் ஏற்றி வீரத்தோடு
மண்ணில் வீழ்ந்த விதைகள்...
இடியாய் வெடிக்கும்
வெடிசத்தம் இங்கில்லை..
இறந்தும் மானம் பறிக்கும்
காம கயவர்கள்
எவருமில்லை
பலரின் கனவினை நினைவாக்க
உறவிழந்து சிலகாலம் ,
உடல் உறுப்பிழந்து சிலகாலமென
வாழ்ந்து மறைந்த தீயாக தீபங்கள்
வனத்தில் வசித்து ,
ரசாயன புகையை சுவாசித்து
மூச்சு திணறி
உயிர் துறந்து இதயங்கள்
இளைபாறுதல் வேண்டி
மண்ணில் புதைந்த கோலம்..
சொந்த நாட்டில் பிணைகைதியாய்
அயல்நாடுகளில் அகதிகளாய்
ஏக்கத்தோடு வாழும்
எம் உறவுகளின் துயர்த் துடைக்க
உயிர் நீத்த வீரர்களே...
கதிரவனை
கைக்கொண்டு மறைப்பாருமுண்டோ ?
விடியாத விடியளுமுண்டோ ?
மண்ணில் புதைத்த விதைகள் நீங்கள்
உம்மில் வரும் விழுதுகளுக்காக
காத்திருக்கிறோம் ..
கண்ணீர் விட்டு கதறமட்டோம்
உம் கனவுகளை நினைவாக்க
காலமது கனிந்துவரும்
திருநாளை நோக்கி பார்த்திருக்கிறோம்
அதுவரை மலர் போர்வை அளித்து
உம்மை உறங்க சொல்கிறோம்.....