வறுமை
மனிதனுக்கு அது ஒரு கொடுமை!
செழுமை
மனிதனிக்கு அது ஒரு இனிமை!
புவியிலே பசியால் வாடும்...
மனிதர்களின் இருப்பிடம் தெருக்கோடி!
பணம் படைத்த மனிதர்கள்...
படுத்து உறங்குவதே
பணம் என்னும் கோடிகளில் தான்!
சுயநலம் தலைக்கேறி
சக மனிதர்களை பற்றி சிந்திக்காத...
சுயநலம் பிடித்த மனிதர்கள்
ஏராளம் இந்த பூமியிலே!
அண்டை வீட்டில்...
அடுப்பெரிந்தாலும் இல்லாவிட்டாலும்
தன் வயிறு நிரம்பினால் போதும் என்று
சுயநல சிந்தனை கொண்ட...
மனிதர்கள் ஏராளம் இப்பூமியிலே!
வீணாய் போகும் உணவுகளை
கீழே வீசவும் தயார்!
ஆனால்...
பசித்த வயிற்றிற்கு ஒரு வாய்
உணவளிக்க சிந்திக்காத மனிதன்!
இல்லை... அவன் மிருகம்!
இருந்தும்...பிறரின் துன்பத்தை
தன் துன்பமாய் கருதும்
மனிதநேயம் படைத்த...
நல்லுள்ளங்களும் இருக்கிறார்கள்
இப்பூமியிலே!
அதற்க்கு எடுத்துக்காட்டுதான்
இப்புகைபடமோ!
என்று வியக்க தோன்றுகிறது...
மனது!
தன் சொந்த பிள்ளைக்கு...
தன் கையால் ஊட்டி விட
நேரமாற்ற மனிதர்கள்
ஏராளம் இக்காலத்திலே!
இருந்தும்... யாரென்றும் தெரியாத
சக மனிதனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட
அச்சகொதரனுக்கு தன் கையால்
உணவை ஊட்டி விடும்...
இச்சகொதரனின் மனிதநேயத்தை பார்க்கையிலே
நெஞ்சமெல்லாம் உருகுதடா!!!
இப்படிப்பினையை நாமும் ஏற்று...
பசித்தொருக்கு உணவளிக்க முன்வருவோம்!
மனிதநேயத்தை காக்கும் மனிதர்களாய்...
நடந்து கொள்வோம்!